5 பெண்களை திருமணம் செய்து கொண்ட 17 வயது சிறுவன் : திடுக்கிடும் பின்னணி!!

1130

வங்கதேசத்தில் தனது வயதை பொய்யாக கூறி 5 பெண்களை திருமணம் செய்து கொண்ட சிறுவனை பொலிசார் தேடி வருகிறார்கள்.

ரஷித் என்பவரின் மகன் ராணா (17). இவர் தனக்கு 21 வயதாகிவிட்டது என பொய்யாகி பிறப்பு சான்றிதழை தயார் செய்து கடந்தாண்டு ஜனவரியில் ஒரு பெண்ணை திருமணம் செய்தார்.

ஆனால் ராணாவுக்கு 17 வயது தான் ஆகிறது என்பதை கண்டுபிடித்த மனைவி அவரை விவாகரத்து செய்துவிட்டார்.

இதே பொய்யை கூறி ராணா இதுவரை ஐந்து பெண்களை திருமணம் செய்துள்ளார். கடைசியாக கடந்த 20ம் திகதி மவுசுமணி என்ற பள்ளி மாணவியை ராணா மணந்தார்.

மவுசுமணியை தவிர மற்ற நால்வரும் ராணாவை விவாகரத்து செய்துவிட்டனர். ராணாவின் மோசடி செயல் குறித்து பொலிசுக்கு தெரியவந்துள்ள நிலையில் அவரின் தந்தை ரஷித் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராணா தலைமறைவாகியுள்ளதால் பொலிசார் அவரை தேடி வருகிறார்கள்.

ஊர் தலைவருக்கு பணம் கொடுத்து பொய்யாக பிறப்பு சான்றிதழை ராணா வாங்கியுள்ளது தெரியவந்துள்ள நிலையில் இது குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.