பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடம்!!

240

எஸ்.பி.பாலசுப்பிரமணியம்..

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ள வைத்தியசாலை அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த மாதம் ஐந்தாம் திகதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்தும், சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து, ஆகஸ்ட் 14ம் திகதி அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதனால் வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையிலேயே, பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக வைத்தியசாலை நிர்வாகம் இன்று இரவு அறிக்கை வௌியிட்டிருந்தது.

இதனிடையே, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அனுமதிக்கப்பட்டுள்ள வைத்தியசாலைக்கு சென்ற நடிகர் கமல்ஹாசன், அவரின் உடல் நிலை குறித்து வைத்தியர்களிடம் விசாரித்துள்ளார்.

இந்நிலையில், வைத்தியசாலைக்கு வெளியே ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த கமல்ஹாசன், “உயிர் காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் நம்பும் இறைவனை வேண்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

கிரிட்டிக்கல் ஆக இருக்கிறார், ஆனால், நலமாக இருக்கிறார் என்று சொல்ல முடியாது” என தெரிவித்துள்ளார்.