எஸ்.பி.பாலசுப்ரமணியம்….
தமிழில் திரையுலகில் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகில் முன்னணி பாடகராக திகழ்ந்து வந்தவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.
இவர் கொரோனா தொற்று ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வருகிறார்.
ஆனால் நேற்று உடல்நல குறைவு காரணமாக மதியம் 1.04 மணி அளவில் உயிரிழந்துள்ளார் எஸ்.பி.பி.
இவரின் மறைவு தமிழ் திரையுலகிற்கு மட்டுமல்லாமல் இந்திய திரையுலகிற்கே பெரும் இழப்பையும், பெரும் துயரத்தையும் தந்துள்ளது.
இந்நிலையில் தனது மறைவிற்கு முன்பு தனது ரசிகனான ஒருவரை தனது குரல் மூலமாக மகிழவைத்துள்ளார். ஆம் எஸ்.பி.பியின் இந்த தீவீர ரசிகருக்கு கண்ணால் பார்க்க இயலாது.
அதனால் அவரை மகிழ வைக்க வேண்டும் என்று சப்ரைஸ் கொடுத்துள்ளார் எஸ்.பி.பி. இந்த வீடியோவை பார்த்த அனைவரையும் கண்கலங்க வைத்துவிட்டார் எஸ்.பி.பி. என்று தான் சொல்லவேண்டும்.
MSV முதல் ARR வரை அக்கனம் போல இக்கனுமும் வாழ்ந்த சிறந்த பாடகர் மட்டுமின்ற சிறந்த மனிதரும் நீர்.#RIPSPB pic.twitter.com/8m0AjMGw3U
— பகவதி (@VForVijayna) September 25, 2020