8 வயதில் 3 கொலை! சைக்கே கில்லராக மாறிய சிறுவன் அதிர்ச்சி காரணம்!!

1080

உலகின் பல்வேறு நாடுகளில் கொலை, கொள்ளை கற்பழிப்பு, கடத்தல் போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. இப்படி இந்தியாவைச் சேர்ந்த 8 வயது சிறுவன் உலகின் இளம் வயது சீரியல் கில்லர் என்ற பெயர் வாங்கும்படியான அவலம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவை சேர்ந்த அமர்ஜித் சதா என்னும் எட்டு வயது சிறுவன் தொடர்ந்து மூன்று கொலை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளான். இவன் கொலை செய்த மூவருமே சிறு குழந்தைகள் என்றும் மேலும் பிறந்த சில மாதங்களே ஆன குழந்தைகள் எனவும் கூறுகின்றனர்.

அமர்ஜீத் இரண்டாவதாக கொலை செய்தது அவன்கூட பிறந்த தங்கை. இந்த கொலையை அவர்களது பெற்றோரே மூடி மறைத்துவிட்டனர். மூன்றாவது கொலையாக அமர்ஜித் அவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்தவரின் குழந்தை. அந்த குழந்தை பிறந்து ஆறு மாதங்களே ஆனவர். அமர்ஜித் சிறிதும் இரக்கமின்றி குழந்தையின் தலையை உடைத்து, நசுக்கி அதன்மேல் இலை, தாவரங்கள், குப்பைகள் போன்றவற்றை போட்டு மூடியுள்ளார்.