ஆமை மீது கூலாக அமர்ந்து சவாரி செய்யும் பூனை : வியக்க வைத்த காட்சி.!!

303

பூனை……..

பலரும் கேள்வி பட்டிருப்போம் முயலும் ஆமையும் ஓட்டப் பந்தயம் சென்ற கதை. அதில் இறுதியில் யார் வெற்றி பெருவார் என்பதும் நமக்கு தெரிந்த கதை தான். அதனை வெளிப்படுத்துவது போல இணையத்தில் காணொளி ஒன்று வைரலாகி வருகின்றது.

இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

பலரும் இதனை பகிர்ந்து வருகின்றனர். கண்ணா..நம்ம ஆட்டம் எப்டி இருக்கு என்பன போல் பூனை ஒன்று ஆமையின் மேல் ஏறிச் செல்கின்றது.

ஆஹா.. ஆக மொத்தம் நான் ஜெயிக்க கூடாது அதானடா உங்க எண்ணம் என்பதுபோல, ஆமையும் பூனையை சுமந்தபடி செல்லும் வீடியோ இணையவாசிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது.