கதறி அழுத சுட்டி தேவதையை கட்டி அனைத்த நாய்! தாய் பாசத்தையும் மிஞ்சிய செயல் : மில்லியன் பேரை நெகிழ செய்த காட்சி!!

410

சீனா………

சீனாவில் செல்லப்பிராணி செய்த செயல் அதன் உரிமையாளர் மட்டும் அல்லாது அனைவரின் மனங்களையும் வென்றுள்ளது.

சீன நகரமான சுஜோவில் வசித்து வருபவர் சன். இவர் தனது வீட்டில் கோல்டன் ரெட்ரீவர் வகை நாய் ஒன்றை வளர்த்து வருகின்றார்.

இவருக்கு பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. சன் தனது முகத்திற்காக மாய்ஸ்சரைசிங் கிரீம் ஒன்றை வாங்கியுள்ளார்.

இதனை பார்த்த அவரது மகள் மாய்ஸ்சரைசிங் கிரீமை திறந்து அதனை பாதி விளையாட்டு தனமாக பயன்படுத்திவிட்டாள். இதனால் தாய் கோவத்தில் திட்டியுள்ளார்.

நாய் குழந்தையை திட்ட வேண்டாம் என்ற படி முகபாவனைகளுடன் சிறுமியின் பக்கத்தில் சென்று கட்டியணைத்தது.