பிறக்கும் போதே மூன்று பற்களுடன் பிறந்த குழந்தை!! கடலூர் அருகே ஆச்சரியம்!!

262

கடலூர்……

பிறக்கும் போது மூன்று பற்களுடன் பிறந்த அதிசய குழந்தையை மக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.

குழந்தை பெற்றெடுப்பது என்பது மறுபிறவி எடுத்து வருவதற்கு சமம். 10 மாதம் சுமந்து குழந்தைகளை பெற்றெடுக்கும் தாய்மார்கள், குழந்தையை பெற்றெடுத்து கிடைக்கும் மகிழ்ச்சி அளிவிட முடியாதது.

இந்த நிலையலி பிறக்கும் போதே மூன்று பற்களுடன் பிறந்த அதிசய குழந்தை ஆச்சரியத்தை ஏற்டுபடுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அடுத்த மா.கொளக்குடியை சேர்ந்த பாலமுருகன் நிவேதா தம்பதியருக்கு சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது.

அந்த குழந்தைக்கு பிறக்கும் போதே மூன்று பற்கள் இருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதை அறிந்த அப்பகுதி மக்கள், குழந்தையை காண தினந்தோறும் வந்து செல்கின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது, லட்சத்தில் ஒரு குழந்தை இப்படி பிறக்கும் என்று தெரிவித்தனர்.