தமிழ் படிக்க ஆர்வம் காட்டும் வெள்ளைக்காரர்!

324

வெள்ளைக்காரர்…………

வெளிநாடுகளில் வாழும் நம்மவர்கள் தாய் மொழியை மறந்து தம் பிள்ளைகளுக்கு ஆங்கிலத்தை மட்டுமே இக்காலத்தில் கற்றுக்கொடுக்கின்றனர்.

ஏனெனில் தமிழ் மொழியில் உரையாடுவது அவர்களுக்கு கௌரவகுறைவாக அனேகம் பேர் கருதுகின்றனர். பலர் என் பிள்ளைக்கு தமிழ் தெரியாது என பெருமையாக சொல்வதைகூட நாம் கண்டிருக்கின்றோம்.

ஆனால், ஆங்கிலேய இனத்தவர் இனம் கடந்து, மதம் கடந்து, மொழி கடந்து நம் செம்மொழியான தமிழ் மொழியில் தம் மழலைக்கு விஜயதசமி நன்நாளில் அரிச்சுவடி கற்றுக்கொடுக்கும் காணொளி ஒன்று வைரலாகி வருகின்றது.

தாய் மொழியாம் நம் தமிழ் மொழியை பேசுவதும், தம் பிள்ளைகள் அதனை கதைப்பது கௌரவக்குறைவு என நினைப்பவர்களுக்கு ஆங்கிலேயரின் இந்த செயலானது சாட்டையடியாக அமைந்துள்ளது.