பாகனுக்கு அழகாய் தமிழில் பதில் சொல்லும் யானை!!

326

யானை……..

ஸ்ரீரங்கம் கோவிலின் யானை ஆண்டாள் பாகனுடன் பேசும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலின் யானை ஆண்டாள்.

இந்த யானை தனது குறும்புச் செயல்களால் பக்தர்களை மனம் கவர்ந்தது. தற்போது ஆண்டாள் தனது பாகனுடன் சாலையில் நடந்தவாறே அவர் கேட்கும் கேள்விகளக்கு பதிலளிக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது. இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 1986ம் ஆண்டு ஸ்ரீரங்கம் கோவிலுக்கு ஆண்டாள் யானை கொண்டுவரப்பட்டது. கடந்த 36 ஆண்டுகளாக கோவில் திருப்பணிகளை ஆண்டாள் யானை சிறப்பாக செய்து வருகிது. நவராத்தி விழாவில் ஆண்டாளின் பங்கு அளப்பரியது.

சுட்டியாக சுறுசுறுப்புடன் இருக்கும் ஆண்டாய் யானை ஆர்கன் வாசிப்பது, சலங்கை அணிந்து ஒற்றை காலில் நொண்டி அடிப்பது என பல அறிய செயல்களை செய்து பக்தர்களின் மனங்களை கவரும்.

பொதுவாக யானைகள் பாகன்கள் தாங்கள் வளர்க்கும் யானைகளிடம் மலையாளத்திலேயே பேசுவார்கள். உத்தரவும் பிறப்பார்கள். இதை கேட்டு பாகன் சொல்படிதான் யானைகள் நடக்கும்.

ஆனால் இந்த ஆண்டாள் யானை பாகன் ராஜேஷ் தமிழில் கேள்வி கேட்க அதற்கு ஆண்டா ஆம், இல்லை என பதில் கூறுகிறது. இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பின்னர் ஆண்டாள் சாலையில் நின்று கொண்டு பாகனிடம் நான் வர மாட்டேன் என அடம் பிடிக்கிறது. உடனே பாகன் வரமாட்டியா? என கேட்க ஆண்டாளும் வரமாட்டேன் என தனக்கே உரிய பாணியில் பதில் அளிப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.