பட்டையை கிளப்பிய கேரள தம்பதி! ஊழியர்களை போலவே மாற்றிய போட்டோ ஷூட் : மில்லியன் கணக்கில் குவியும் வாழ்த்து!!

330

கேரளா…….

கேரளாவை சேர்ந்த புதுமண தம்பதிகள் வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தி சமூக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்து பாராட்டை பெற்று உள்ளனர்.

வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்களில் திருமணமும் ஒன்று. அத்தகைய திருமணத்தின் மறக்கமுடியாத தருணத்தை புகைப்படம் எடுத்து வைத்து காலந்தோறும் கண்டு மகிழ யாருக்குத்தான் விருப்பம் இருக்காது.

அப்படித்தான் சமீப காலங்களில் திருமணத்துக்கு முன்பு என கூறப்படும் ப்ரீவெட்டிங் போட்டோக்களை திருமண தம்பதிகள் எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கேரளாவில் அண்மையில் கிளாமராகவும் மாடர்னாகவும் ப்ரீவெட்டிங் போட்டோ ஷூட் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

ஆனால் அதற்கு மாற்றாக செய்யும் தொழிலுக்கு மரியாதை செய்யும் வகையில் கேரளாவைச் சேர்ந்த தம்பதியினர், அண்மையில் எடுத்துள்ள ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட் வைரல் ஆகியுள்ளது.

திருமண தம்பதிகள் கட்டிடம் கட்டும் கட்டுமான பணியில் ஈடுபடும் ஊழியர்களை போன்று காட்சி தருகின்றனர்.

இந்த போட்டோ ஷூட் சமூக ஊடகங்களில் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.