ஆர்ஆர்ஆர்..
ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா, ஆலியா பட் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஆர்ஆர்ஆர்’. கொரானோ தொற்று பரவலுக்குப் பிறகு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் முதல் மீண்டும் ஆரம்பமாகி நடந்து வருகிறது.
இப்படத்தில் கதாபாத்திரங்களை பின்னணிக் குரல் மூலம் அறிமுகப்படுத்தி வைக்க மொழிக்கு ஒருவராக அந்தந்த மொழிகளில் பிரபலமான நடிகர்களைக் கேட்க ஆரம்பித்துள்ளனர்.
அந்த விதத்தில் தெலுங்கில் சிரஞ்சீவியும், ஹிந்தியில் ஆமீர் கானும் குரல் கொடுக்க சம்மதித்துவிட்டார்களாம். தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளுக்கான நடிகர்களிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.
தமிழில் அப்படி குரல் கொடுக்க வேண்டுமென்றால் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவர்தான் பொருத்தமாக இருப்பார்கள்.
அவர்களில் யார் ஒருவர் சம்மதிக்கப் போகிறார்கள் என்பது சீக்கிரம் தெரிய வரலாம்.