திருடனை பாய்ந்து பிடித்த உதவி காவல் ஆய்வாளர்… குவியும் பாராட்டுக்கள்..! வீடியோ காட்சி!!

243

ஆன்டலின் ரமேஷ்…….

சென்னையின் மாதவரம் சாலையில் இரு இளைஞர்கள் ஹெல்மெட் மற்றும் முகமூடி அணிந்தவாறு சாலையில் சென்ற நபரிடம் செல்போனை பறித்துக்கொண்டு செல்ல முயன்றனர்.அப்போது அந்த இடத்தில மாதவரம் உதவி காவல் ஆய்வாளர் ஆன்டலின் ரமேஷ் நின்று கொண்டிருந்தார்.

அப்போது செல்போனை பறிகொடுத்த நபர் திருடன் என கத்தியுள்ளார்.அதனை தொடர்ந்து அங்கு நின்று கொண்டிருந்த காவல் ஆய்வாளர் அவர்களை துரத்தி சென்றார்.ஆனால் அவரை மீறி அவர்கள் தப்பி செல்ல முயன்றதால் இருசக்கரவாகனத்தில் இருந்து கீழே குதித்து அவர்களை பிடிக்க முயற்சித்தார்.

இருப்பினும் ஒருவன் ஓடிவிட்ட நிலையில் திருடன் ஒருவனை வசமாக பிடித்துள்ளார்.அத்துடன் கொள்ளையில் தொடர்புடைய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தற்போது இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி Twitter ல் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை தனது Twitter பக்கத்தில் பகிர்ந்து உதவி காவல் ஆய்வாளர் ஆன்டலின் ரமேஷை பாராட்டியுள்ளார். சினிமாவை போன்று நிஜத்தில் திருடர்களை கைது செயதகுலர் ரமேஷ் என அவர் பதிவிட்டுள்ளார்.உதவி காவல் ஆய்வாளர் ஆன்டலின் ரமேஷை பலரும் பாராட்டி வருகின்றனர்.