குழந்தையைப் போல் தொட்டிலில் படுத்து தூங்கும் கன்றுக்குட்டி.. வீடியோ உள்ளே!

262

கன்றுக்குட்டி…

மாடுகளை வீட்டின் பின்வாசலில் கட்டி வைக்கும் விவசாயிகள் பலரையும் பார்த்திருப்போம். ‘’ஆடு, மாடு மேல உள்ள பாசம் வீட்டு ரேசன்கார்டில் பேரை சேர்க்க கேட்கும்” என சிவாஜி திரைப்படத்தின் பல்லேலக்கா பாடலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாடும் பாடலைப் போலவே நிஜத்தில் ஒரு குடும்பம் இருக்கிறது என்றால் ஆச்சர்யம் தானே?

பசு மாடு செல்வம் சேர்க்கும் என்பது ஐதீகம். அதனால் தான் பசுவை கோமாதா என வழிபடுகிறோம். இங்கே ஒரு வீட்டில் வளர்த்த பசு கன்று குட்டி போட்டது. அந்த கன்று குட்டியின் மீது மொத்த குடும்பமும் ரொம்பவே பாசம் வைத்திருந்தது. இந்நிலையில், அந்த கன்றுகுட்டிக்காக தன் தோட்டத்தில் தொட்டில் கட்டியுள்ளனர் இந்த குடும்பத்தினர்.

அந்தத் தொட்டிலில் படுத்து செம ரிலாக்ஸ்டாக தூங்குகிறது கன்றுகுட்டி. இரண்டு மரங்களுக்கு இடையில் மரத்தில் கட்டி தொங்கவிட்டிருக்கும் இந்தத் தொட்டிலில் கன்றுக்குட்டி படுத்து உறங்கும் வீடியோ வை ரல் ஆகிவருகிறது.