நீர் தொட்டியில் தவறி விழுந்த குட்டி குரங்கு.. பாசத்தால் தாய் குரங்கு செய்ததை பாருங்க.. உருகிப் போவீங்க…!

192

குரங்கு……….

பாசம் என்பது மனிதர்களுக்கு மட்டுமானது அல்ல. அது, அனைவருக்கும் பொதுவானது. அதிலும் தாய் பாசம் என வந்துவிட்டால்? மனிதன் என்ன பிராணி என்ன? இங்கேயும் அப்படித்தான். ஒரு சம்பவம் நடந்துள்ளது.

குரங்கு குட்டி ஒன்று தாவித்தாவி விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது குட்டிக்குரங்கு தவறுதலாக அந்தப்பகுதியில் இருந்த ஒரு தண்ணீர் தொட்டிக்குள் விழுந்துவிட்டது. உடனே தாய் குரங்கு பதறியபடி மேலே இருந்தவாறே தன் ஒரு கையை நீட்டியது.

ஆனால் குடிக்குரங்குக்கு அது எட்டவில்லை. நீண்டநேரமாகியும் தாய் குரங்கு, தன் குட்டியை தொட்டியில் இருந்து மேலே கொண்டுவர முயற்சித்துக் கொண்டிருந்தது. அதிர்ஷ்டவசமாக அந்தத் தொட்டியில் முழுக்க தண்ணீர் இல்லை. அதனால் குட்டிக்குரங்கு நீருக்குள் மூழ்கவில்லை. அதேநேரம் அதனால் தொட்டியில் இருந்தும் வெளியே வரமுடியவில்லை.

கடைசியில் தாய் குரங்கு தன் இருகைகளையும் தொட்டியின் மேல் பகுதியில் இறுகபற்றிக்கொண்டு பின்பக்கமாக நின்றவாறு தன் வாலை நீட்டியது. கடைசியில் தாய்குரங்கின் வாலைப்பிடித்தவாறு குட்டி மேலே சென்றது. குறித்த இந்தக்காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.