பிரித்தானியாவில் 42 வயதில் 21-வது குழந்தை பெற்றெடுக்கும் பெண்!!

971

பிரித்தானியாவில் 20 குழந்தைகள் பெற்றெடுத்த பெண் தற்போது மீண்டும் கர்ப்பமாகியுள்ளார்.பிரித்தானியாவின் Morecambe பகுதியைச் சேர்ந்த தம்பதி Sue(42)-Noel(47). இந்த தம்பதிக்கு கடந்த செப்டம்பர் மாதம் தான் குழந்தை பிறந்தது.

அது அவர்களுக்கு 20-வது குழந்தை என்பதால், இனிமேல் குழந்தையே பெற்றுக் கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்திருந்தனர்.ஆனால் Sue தற்போது மீண்டும் கர்ப்பமாகியுள்ளார் 21-வது குழந்தையை பெற்றெடுக்கவுள்ளார். அக்குழந்தை பெண் குழந்தை எனவும் நம்பிக்கையில் உள்ளனர்.

இது குறித்து உள்ளூர் ஊடகம் தெரிவிக்கையில், இந்த தம்பதிக்கு மொத்தம் 20 குழந்தைகள் உள்ளனர்.அவர்களின் பெயர்கள் Chris(28), Sophie(23), Chloe(22), Jack(20), Daniel(18), Luke மற்றும் Millie(16), Katie(14), James(13), Ellie(12) Aimee(11), Josh(10), Max(8), Tillie(7), Oscar(5), Casper(4), Hallie(2), மற்றும் Phoebe 13 மாத குழந்தையாகவும், கடந்த செப்டம்பர் மாதம் பிறந்த குழந்தைக்கு Archie என்று பெயர் வைத்துள்ளனர்.

இந்த தம்பதி வாரத்திற்கு 300 பவுண்ட் ஷாப்பிங்கிற்கே செலவு செய்வதாகவும், நாள் ஒன்றுக்கு 10.50 லிட்டர் பால் மற்றும் மூன்று லிட்டர் பழச்சாறு தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

மொத்தம் 10 படுக்கை அறைகள் கொண்ட வீட்டில் இவர்கள் வசித்து வருவதாகவும், தந்தையான நோயில் Pie கம்பெனி நடத்தி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த தம்பதிக்கு மூன்று பேரக்குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.