தகாத உறவுதான் வேண்டும் : கள்ளக்காதலனோடு சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவி!!

448

மயிலாடுதுறையில் கள்ளக்காதலனோடு சேர்ந்து தனது கணவரை கொலை செய்த மனைவியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அறிவழகன் ரேகா தம்பதியினர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
இவர்களுக்கு இண்டு குழந்தைகள் உள்ளனர். மின்சார ஊழியரான அறிவழகன் வெளியூரில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில், விடுமுறைக்காக வீடு திரும்பிய இவர் நேற்று மர்மமான முறையில் இறந்தார். மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாக மனைவி ரேகா உறவினர்களிடம் சொல்லி சமாளித்துள்ளார், ஆனால் அவரது உடலில் காயங்கள் இருந்ததையடுத்து உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதையடுத்து பொலிசில் புகார் அளித்துள்ளனர்.

இதுதொடர்பாக சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரித்துள்ளனர். அறிவழகனின் பிரதே பரிசோதனையில் அவருக்கு மூச்சுத்தினறல் ஏற்பட்டதும், கழுத்து நெறிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

காவல்துறையினரின் விசாரணையில் தப்பிக்க முடியாத ரேகா, கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அத்துடன் பல திடுக்கிடும் தகவல்களும் வெளியாகின.

னது கணவர் வேலைக்காக வெளியூர் சென்றபோது, தன் வீட்டிற்கு அருகாமையில் வேலை செய்த பெயிண்டர் ராஜசேகருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அந்தப் பழக்கம் பின்னர் தகாத உறவாக மாறியுள்ளது. இந்த விஷயம் வெளியூரில் இருந்து வீடு திரும்பிய அறிவழகனுக்கு தெரியவர, இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் ராஜசேகருடன் சேர்ந்து தனது கணவரை கொலை செய்ய ரேகா திட்டமிட்டுள்ளார். அதன்படியே, இரவில் தூங்கிக்கொண்டிருந்த தன் கணவரை, ராஜசேகருடன் சேர்ந்து கழுத்தை நெறித்தும், முகத்தில் தலையணையை வைத்து அழுத்தியும் கொலை செய்துள்ளார்.

இந்தக் கொடூர கொலையை செய்துவிட்டுதான் ரேகா நாடகமாடியுள்ளார். விசாரணையின் உண்மை தெரியவர, ராஜசேகர் மற்றும் ரேகாவை கைது செய்த காவல்துறையினர் அவர்களை சிறையில் அடைத்துள்ளனர்.