படப்பிடிப்பு நடத்தும் போது அருவியில் தவறிவிழுந்து பரிதாபமாக உயிரிழந்த பிரபல இயக்குனர்!!

599

கன்னட சினிமாவில் Kanasu Kannu Teredada என்ற படத்தை இயக்கியவர் சந்தோஷ் கடீல். இவர் ஒரு புதிய போட்டோ ஷுட் நடத்துவதற்காக 4 நண்பர்களுடன் இராமி நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளார், அதுவும் மழை நேரத்தில்.

அங்கு அவர் ஒருசில காட்சிகளை படப்பிடிப்பு செய்தபோது மழையில் கால் தவறி நீருக்குள் விழுந்துள்ளார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் காப்பாற்ற முயன்றுள்ளனர்.

ஆனால் அவர் உயிரிழந்துள்ளார், இந்த சம்பவம் நேற்று (மே 30) காலை 8.30 மணியளவில் நடந்துள்ளது. சந்தோஷ் மரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.