பாலியல் வன்கொடுமை

சென்னை வியாசர்பாடியில் தனியாக வசித்து வந்த 64 வயது பாட்டியை 5 சிறுவர்கள் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டு வேலை செய்து தனியாக வசித்தும் வரும் பாட்டியிடம் அதே பகுதியை சேர்ந்த 17 வயதுக்கும் குறைவான 5 சிறுவர்கள் ஒன்று சேர்ந்து கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

பாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருப்பவர்கள் வ்ந்து மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். விசாரணையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 17 வயதான சிறுவனை கைது செய்த பொலிசார் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். மேலும் இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.