ராசிகளை பொறுத்து துன்பத்தினை போக்குவதற்கு அனைவரும் பரிகாரங்களையும் பூஜைகளையும் மேற்கொள்வர்.வெற்றிலை பரிகாரத்தினை செய்வதன் மூலம் அனைத்து ராசிகாரர்களும் துன்பங்களை தவிர்க்கலாம்.
மேஷம்:வெற்றிலையில் மாம்பழம் வைத்து செவ்வாய்கிழமை முருகனை வழிபட்டு சாப்பிட துன்பங்கள் அகலும்.
ரிஷபம்:வெற்றிலையில் மிளகு வைத்து செவ்வாய்கிழமை ராகுவை வழிப்பட்டு சாப்பிட்டால் துன்பங்கள் விலகும்.
மிதுனம்:வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து புதன்கிழமை இஷ்டதெய்வத்தினை வணங்கி சாப்பிட்டால் துன்பம் தீரும்.
கடகம்:வெற்றிலையில் மாதுளம்பழம் வைத்து வெள்ளிகிழமை காளி தெய்வத்தை வணங்கி சாப்பிட்டால் துன்பம் விலகும்.
சிம்மம்:வியாழக்கிழமையன்று வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து இஷ்டதெய்வத்தினை வணங்கி சாப்பிட்டால் கஷ்டம் விலகும்.
கன்னி:வெற்றிலையில் வியாழக்கிழமையன்று மிளகு வைத்து இஷ்டதெய்வத்தினை வணங்கி சாப்பிட்டால் துன்பம் தீரும்.
துலாம்:வெற்றிலையில் கிராம்பு வைத்து வெள்ளிகிழமை இஷ்ட தெய்வத்தினை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் தீரும்.
விருச்சிகம்:வெற்றிலையில் பேரிச்சம்பழம் வைத்து செவ்வாய்கிழமை இஷ்ட தெய்வத்தினை வழிபட்டு சாப்பிட்டால் துயரம் தீரும்.
தனுசு:வெற்றிலையில் கல்கண்டு வைத்து வியாழக்கிழமை இஷ்ட தெய்வத்தினை வணங்கி சாப்பிட்டால் கவலை தீரும்.
மகரம்:அச்சு வெல்லத்தினை சனிக்கிழமையன்று வெற்றிலையில் வைத்து காளி தெய்வத்தினை வணங்கி சாப்பிட்டால் துன்பம் விலகும்.
கும்பம்:வெற்றிலையில் நெய் வைத்து சனிக்கிழமை காளி தெய்வத்தினை வணங்கி சாப்பிட்டால் கவலை தீரும்.
மீனம்:ஞாயிற்றுகிழமை இஷ்ட தெய்வத்தினை வழிபட்டு வெற்றிலையில் சர்க்கரை வைத்து சாப்பிட்டால் நோய் தீரும்