எனக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை: நடிகர் சிவகார்த்திகேயனின் மனதை உருக்கும் பதிவு!!

532

ஒவ்வொரு நொடியும் தந்தையின் நினைவுடன் வாழ்ந்து வருவதாக நடிகர் சிவகார்த்திகேயன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.டுவிட்டரில் நடிகர் சிவகார்த்திகேயனின் ரசிகர் ஒருவர் மறைந்த அவரின் தந்தை புகைப்படத்தை எடிட் செய்து வெளியிட்டார்.

அதை பார்த்த சவுந்திரராஜன் என்ற சிறை அதிகாரி, உயிரிழந்த நாளில் சிவகார்த்திகேயன் அப்பா எனது அதிகாரியாக இருந்தார்.நான் தான் கடைசியாக அவருக்கு தண்ணீர் கொடுத்தேன், அவருக்கு கீழ் பணியாற்றியதை பெருமையாக கருதுகிறேன் என குறிப்பிட்டார்.

என் தந்தை மறைந்து 15 ஆண்டுகளுக்கு பிறகும் அவரை பேசுகிறீர்கள் என்றால் அது அவர் பெருமையையும் உங்கள் நல்ல மனதையும் காட்டுகிறது.

ஒவ்வொரு நொடியும் அவர் நினைவுகளுடன் வாழ்கிறேன், என் ரோல் மாடலான அப்பாவுடன் சேர்ந்து பல ஆண்டுகள் வாழ போதுமான அதிர்ஷ்டம் எனக்கு இல்லை என்று நினைக்கிறேன், உங்களை மிஸ் செய்கிறேன் அப்பா என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.