சாத்தானின் பிள்ளை: சிட்னியில் தூக்கத்தில் இருந்த பெற்ற மகனை கொடூரமாக கொலை செய்த தந்தை!!

503

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தூக்கத்தில் இருந்த 5 வயது சிறுவனை தந்தையே கத்தியால் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலை குற்றம் சுமத்தப்பட்டுள்ள குறித்த தந்தை மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும், இருமுறை உளவியல் சிகிச்சை மேற்கொண்டவர் எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிட்னியின் வடமேற்கில் அமைந்துள்ள Carlingford பகுதியிலேயே வெள்ளியன்று காலை குறித்த கொலை சம்பவம் நடந்துள்ளது.சம்பவத்தின்போது குடியிருப்பில் இருந்த சிறுவனின் பாட்டி துரிதமாக செயல்பட்டு, சிறுவனை அள்ளிக்கொண்டு குடியிருப்புக்கும் 400 மீற்றர் தொலைவில் சென்றுள்ளார்.

ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.இந்த விவகாரம் தொடர்பாக சிறுவனின் தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர். சிறுவன் சாத்தானின் பிள்ளை என்பதாலையே அவனை கொலை செய்துள்ளதாக பொலிசாரிடம் அந்த நபர் கூறியுள்ளார்.

இருமுறை மனநல சிகிச்சை பெற்ற அந்த நபர் மூன்றாவது முறையாக மருத்துவமனை சென்ற நிலையில், படுக்கை அறை இல்லை என்பதால் சிகிச்சை மேற்கொள்ளாமல் திரும்பியுள்ளார்.

இதன் அடுத்த சில நாட்களிலையே தூக்கத்தில் இருந்த சிறுவனை கத்தியால் கொடூரமாக தாக்கி அவர் கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சிறுவன் சாத்தானின் பிள்ளை என கூறினாலும், தந்தையும் மகனும் நல்ல பிணைப்பிலே இருந்துள்ளனர்.மகன் மீது பாசத்துடனும் இருந்துள்ளார். சிறுவனும் தந்தையுடன் நல்ல நட்பாகவே இருந்துள்ளார் என அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

சிறுவனை காப்பாற்ற அவனது பாட்டி மேற்கொண்ட துணிச்சலான செயலுக்கு பொலிசார் பாராட்டு தெரிவித்துள்ளனர்.