என்னை தொந்தரவு செய்தால் குடும்பத்தை ஒழித்துவிடுவேன்! காதலிக்கு மிரட்டல் விடுத்த காதலன்!!

560

தமிழகத்தில் தொந்தரவு செய்தால் உன்னுடைய குடும்பத்தையே ஒழித்துவிடுவேன் என்று காதலன் மிரட்டுவதாக காதலி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

சென்னை அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வரும் 19 வயது இளம் பெண் செய்யாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், செய்யாறு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த நான் சென்னை அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன்.தனக்கும், தன்னுடைய கிராமத்திற்கு தினசரி வரும் தனியார் பள்ளி வேன் ஒகாஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் எல்லையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த விக்னேஷ் (22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

எங்களின் இந்த நட்பு நாளைடைவில் காதலாக மாறியது. இதனால் பலமுறை நாங்கள் தனிமையில் சந்தித்து பேசியுள்ளோம்.

அப்போது அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி, பல முறை உல்லாசமாக இருந்தார். இதனால் தற்போது நான் கர்ப்பமாக உள்ளேன்.தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி விக்னேஷிடம் கேட்டதால், அவர் திருமணம் செய்ய மறுப்பதுடன்

தொடர்ந்து தொந்தரவு செய்தால் குடும்பத்தோடு ஒழித்துவிடுவேன் என கொலை மிரட்டல் விடுக்கிறார்.இதனால் அவர் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் தலைமறைவாக உள்ள விக்னேஷை தேடி வருகின்றனர்.