மனநலம் பாதிக்கப்பட்ட மகள்களால் தாய்க்கு நேர்ந்த கொடூரம்!!

491

உஷா…

நெல்லை கேடிசி நகர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட மகள்களால் தாய் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து நெல்லை தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை கேடிசி நகரை அடுத்த எல்ஜி நகரில் வசித்து வருபவர் உஷா (50), இவரது கணவர் கோவில் பிச்சை., இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது.

இரண்டு பெண் குழந்தைகளும் பட்டதாரிகளாக இருக்கும் நிலையில் அவர்கள் இருவரும் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது உஷா தனது வீட்டில் வைத்து அவர்களை பராமரித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலையில் உஷாவின் மகள் அவரது வீட்டின் பக்கத்து வீட்டுக்காரரிடம் தனது தாய் இறந்துவிட்டார் எனவும் ரத்தம் வருகிறது என கூறியுள்ளார். இதனைக் கேட்ட நிலையில் பக்கத்து வீட்டுக்காரர்கள் வீட்டில் சென்று பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் உஷா இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த நெல்லை தாலுகா காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உஷாவின் உடலில் கத்தியால் குத்திய தடயங்களும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் வீட்டில் இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட உஷாவின் மூத்த மகள் நான்தான் அம்மாவை கத்தியால் குத்தினேன் என தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்ததை கண்ட போலீசார் தடய அறிவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்ததோடு இரண்டு பெண் குழந்தைகளின் கை ரேகையையும் சேகரித்தனர்.

உடலை உடற்கூறாய்வுக்கு நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் மனநலம் பாதிக்கப்பட்ட இரண்டு பெண் குழந்தைகளையும் மீட்டு மனநல காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.