பெண்ணை விழுங்கிய மலைப்பாம்பு: வயிற்றை கிழித்து வெளியே எடுக்கும் பயங்கர காட்சி!

726

மலைப்பாம்பு மனிதர்களை உயிருடன் விழுங்கும் எனக் கதைகளில் படித்திருக்கிறோம், திரைப்படங்களிலும் பார்த்திருக்கிறோம். ஆனால் அது போன்ற உண்மை சம்பவம் இந்தோனேஷியாவில் நடந்துள்ளது.

இந்தோனேஷியாவில் தோட்டத்துக்கு சென்ற பெண்ணை ராட்சத மலைப்பாம்பு உயிருடன் விழுங்கியது. தேடிச் சென்ற உறவினர்கள், பாம்பின் வயிற்றைக் கிழித்து அந்த பெண்ணை சடலமாக மீட்டனர்.

இந்தோனேஷியாவின் முன்னா தீவில் உள்ள சுலாவெசி நகரில் பெர்சியாபென் லாவெலா கிராமத்தை சேர்ந்தவர் வா திபா (51). வியாழக்கிழமை தனது தோட்டத்தில் காய்கறிகள் பறிப்பதற்காக வா திபா சென்றார். ஆனால், இரவுமுழுவதும் திரும்பி வரவில்லை.

இதையடுத்து அவரின் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும், வா திபாவைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியாக தோட்டத்துக்குச் சென்று அவரைத் தேடியபோது, அங்கு ராட்சத மலைப்பாம்பு ஏதோ இரையைத் விழுங்கிவிட்டு நகர முடியாமல் படுத்திருப்பதை கண்டனர்.

ஒருவேளை திபாவை மலைப்பாம்பு விழுங்கி இருக்கலாம் எனசந்தேகித்த கிராம மக்கள், அந்த ராட்சத மலைப்பாம்பைக் கொன்று அதன் வயிற்றுப்பகுதியைக் கத்தியால் கிழித்துப்பார்த்து திபா சடலமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.