நான் விஷமா..? பிக்பாஸ் வீட்டில் முதல் நாளே சண்டைப்போட்ட ஜனனி ஐயர்!!

581

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2வது சீசன் நேற்று துவங்கியது. கடந்த சீசன் போல இல்லாமல் இந்த சீசனில் முதல் நாளிலேயே போட்டியாளர்கள் நடுவில் சண்டை வெடிக்க துவங்கியுள்ளது. காமெடிக்காக சிலர் பேசும் பேச்சுகள் மனக்கசப்பை உண்டாகியுள்ளது.

ஐஸ்வர்யா தத்தா Anti-Oxidants பற்றி அனைவர் முன்பும் பேசிக்கொண்டிருந்தார். அதை பார்த்துக்கொண்டிருந்த நடிகர் தாடி பாலாஜி “என்னது.. உங்க ஆன்டி அக்சிடெண்ட்ல செத்துட்டாங்களா?” என கலாய்த்தார். அதனால் டென்ஷன் ஆன ஐஸ்வர்யா உடனே கோபமாக அங்கிருந்து வெளியேறினார்.

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி போலவே இங்கு பேசியது தான் இந்த சிக்கலுக்கு காரணம் என விமர்சனமும் எழுந்துள்ளது.

மேலும் ஜனனி ஐயரை ‘விஷம்’ என கூறியதால் அவரும் டென்சனாக பேசியுள்ளார்.