பணத்திற்காக வந்த தாடி பாலாஜியின் மனைவி!.. அதிர்ச்சியில் பார்வையாளர்கள்? கண்ணீர் சிந்திய நடிகர்…

1055

மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையே பிக்பாஸ் நிகழ்ச்சி கோலாகலமாக ஆரம்பமாகியது. இதில், நடிகர் தாடி பாலாஜியும் அவரின் மனைவியும் கலந்து கொண்டுள்ளனர்.அறிமுக விழாவில் பேசிய பாலாஜி “நான் என் மனைவியுடன் திரும்ப சேரவேண்டும் என்ற ஆசையில் தான் வந்துள்ளேன் என்று கூறி கண்கலங்கினார்.

ஆனால் அவருக்கு பிறகு போட்டியாளராக அரங்கத்திற்கு வந்த நித்யா பாலாஜி “நான் இந்த நிகழ்ச்சியில் பணத்திற்காக கலந்துகொண்டுள்ளேன்.
நல்ல விடயங்களுக்காக பணத்தை பயன்படுத்துவேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். பாலாஜி பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

ஆரம்பத்தில் நடிகர் பாலாஜி அவரின் மனைவியை புறக்கணிப்பது போல காண்பிக்கப்பட்டது. ஆனால் பாலாஜியை நித்யாதான் கண்டுகொள்ளவே இல்லை.இதேவேளை, இப்போட்டியின் இரண்டாவது போட்டியாளராக திரைப்பட நடிகரான பொன்னம்பலம் கலந்து கொண்டுள்ளார்.

திரையுலகில் ஸ்டண்ட் மாஸ்டர்களுக்கு எப்போது வேண்டும் என்றாலும் எதுவும் ஆகலாம், இதனால் என்னுடைய குடும்பத்தினர் தான் இல்லாமல் எப்படி இருக்கப் போகின்றனர் என்பதை அறிய வேண்டும் என்பதற்காகவே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தொடர்ந்தும் இரண்டாவது வருடமாக கமல்ஹாசன் பிக்பாஸை தொகுத்து வழங்குகிறார். அதில் அவர் கூறிய சில குறுப்படம் முத்துக்கள் மக்களை கவர்ந்தது.

அதில், அரசியலுக்கு வந்த பின்பும், தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முக்கிய காரணம் இருக்கிறது. இந்த நிகழ்வு மூலம் மக்களுடன் அதிக தொடர்பில் இருக்க முடியும்.இந்த பிக்பாஸ் மூலம் தினமும் நான் மக்களுடன் பேச முடியும். இதனால் அதிக மக்களிடம் பேச முடிகிறது.

இந்த பிக்பாஸ் என்பது என்னுடைய, சுயநலம் கிடையாது. என்னுடைய சுயநலத்திற்காக நான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவில்லை. மக்களின் நலனுக்காக, இந்த நிகழ்ச்சியில் எதாவது பேச வேண்டும் என்று நினைக்கிறேன்.இந்த பெரிய தளத்தை மக்களின் நலனுக்காக பயன்படுத்திக் கொள்கிறேன் என்றும் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.