சாப்பிட்ட தோசையில் தங்க மூக்குத்தி : அதிர்ச்சியில் பிரபல நடிகை!!

365

நடிகை…

இந்தியாவில் பிரபல நடிகை ஒருவர் சாப்பிட்ட தோசையில் தங்க மூக்குத்தி இருந்த புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.

கேரள மாநிலத்தில் காக்கநாடு பகுதியைச் சேர்ந்தவர் சூரிய தாரா. இவர் ஏராளமான தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.

நேற்று இரவு படப்பிடிப்பை முடித்துக் கொண்டு வீட்டுக்கு வரும் வழியில் ஒரு கடையில் நின்று தோசை மாவு வாங்கி வந்துள்ளார்.

வீட்டிற்கு வந்ததும் குழந்தைகளுக்கு தோசை ஊற்றி கொடுத்து விட்டு அதன் பின்னர் தானும் தோசை ஊற்றி சாப்பிட்டிருக்கிறார்.

அப்போது சூரிய தாரா சாப்பிட்ட தோசையில் தங்க மூக்குத்தி கிடந்ததை கண்டு அவர் அதிர்ந்து போனார். இதையடுத்து அந்த மூக்குத்தியை புகைப்படம் எடுத்து அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இந்த தோசையை குழந்தைகள் கவனிக்காமல் சாப்பிட்டு இருந்தால் உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கும். தோசை மாவு தயாரிக்கும்போது எதிர்பாராவிதமாக மூக்குத்தி விழுந்திருக்கலாம் என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.