சொந்த மகளிடமே தொடர் பாலியல் சீண்டல் : ஹெல்ப் லைனை தொடர்பு கொண்ட சிறுமி!!

283

சிறுமி..

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட புது முத்தப்ப தெருவில் வசிப்பவர் சரவணன் (42). இவர் தன்னுடைய மகளிடம் பல நாட்களாக பாலியல் சீண்டல் செய்து துன்புறுத்தி வந்துள்ளார். தனக்கு ஏற்படும் அவல நிலையை யாரிடம் கூறுவது என்பது தெரியாமல் செய்வதறியாது மன உளைச்சலில் சிறுமி திகைத்துக் கொண்டிருந்துள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அமர் குஷ்வாஹா திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பாலியல் சீண்டல் குறித்து தகவல் தெரிவிக்க சைல்டு ஹெல்ப் லைன் 1098 எண் உள்ளது என்கிற விழிப்புணர்வை சமீப நாட்களாக ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்றனர்.

இதனை அறிந்த சிறுமி தன்னுடைய தந்தை சரவணன் தனக்கு செய்யும் பாலியல் சீண்டல் குறித்த தகவலை சைல்டு ஹெல்ப் லைன் 1098 என்கிற எண்ணிற்கு போன் செய்து தகவல் கூற சைல்ட் ஹெல்ப் லைன் அலுவகத்திலிருந்து திருப்பத்தூர் மகளிர் காவல் நிலைய ஆய்வாளருக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர்.

உடனடியாக திருப்பத்தூர் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கௌரி, சரவணனை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து விசாரணை செய்ததில் சரவணன் குடிபோதையில் தன்னுடைய மகளிடம் பாலியல் சீண்டல் செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து சரவணன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.

மகள் தன்னுடைய தந்தை பாலியல் சீண்டல் செய்தது குறித்து சைல்டு ஹெல்ப் லைனுக்கு தைரியமாக கூறி தந்தையை காட்டி கொடுத்துள்ளதால் 1098 என்கிற பாதுகாப்பு கவசம் சிறுமிகளை சென்றடைந்துள்ளது என்பது சமூக ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.