பள்ளி மாணவிக்கு ஆசை வார்த்தை கூறி வாலிபர் செய்த மோசமான செயல்!!

244

பள்ளி மாணவிக்கு..

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள காங்கேயம் பாளையம் பகுதியில் பதினோராவது வகுப்பு படித்து வந்தவர் 16 வயது சிறுமி. இதே பகுதியில் தங்கி சூலூர் ஏர்போர்சில் எலக்ட்ரிஷியனாக வேலை பார்த்து வந்தவர் சார்லஸ். மாணவிக்கும் சார்லஸ்க்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சிறுமியிடம் நெருங்கிப் பழகிய சார்லஸ் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி காதலிப்பதாக சொல்லி கடந்த 9 மாதத்திற்கு முன்பாக கேரள மாநிலத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் புகாரின் பேரில் சிறுமியையும் சார்லஸ் இருவரையும் தேடி வந்தனர். 9 மாதங்கள் ஆகியும் சிறுமி கிடைக்காததால் சிறுமியின் பெற்றோர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்திருந்தனர்.

இதனை அடுத்து தனிப்படை அமைத்து சூலூர் காவல்துறையினர் சார்லஸை தேடி வந்தனர். இந்நிலையில் உதவி ஆய்வாளர் ஜான் ரோஸ் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் நாகர்கோவில் பகுதியில்

பதுங்கியிருந்த சார்லஸ் மற்றும் சிறுமியை சுற்றி வளைத்து பிடித்து சூலூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சார்லஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.