அம்பானி மகன் திருமணத்தால் அதிரப்போகும் இந்தியா!!

770

இந்தியாவின் பிசினஸ் ஜாம்பவான் முகேஷ் அம்பானியின் மூத்த மகன், ஆகாஷ் அம்பானிக்கும், ‘ரோஸி புளு’ என்கிற பிரபல வைர நிறுவனத்தின் உரிமையாளரான ரசூல் மேத்தாவின் மகள், ஷ்லோகா மேத்தாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

ஆகாஷ் அம்பானியும், ஷ்லோகா மேத்தாவும் சிறுவயதிலிருந்தே நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ள நிலையில், முன்னதாக அம்பானி மற்றும் மேத்தா குடும்பத்தினர் கோவாவில் உள்ள ரிசார்ட்டில் சந்தித்து பேசினர்.

மும்பையில் பிரபலமான ஓபராய் ஓட்டலில் டிசம்பர் 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை திருவிழா போல, திருமண நிகழ்வுகள் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் உலகம் முழுவதும் இருந்து பிரபலமான தொழில் அதிபர்களும், இந்திய பிரபலங்கள் அனைவரும் இதில் பங்கேற்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

மிகப் பிரமாண்டமாக, பல கோடிகளை செலவிட்டு நடத்தப்படும் திருமணத்தை இந்தியாவில் டிசம்பர் மாதம் எதிர்பார்க்கலாம்.