விரக்தியில் நடிகை ஆண்ட்ரியா: இப்படி ஒரு முடிவை எடுத்தாரா?

810

பிரபல நடிகை ஆண்ட்ரியா மிகவும் துணிச்சலானவர். இவர் எப்போதுமே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பார். அதனாலே சினிமாவில் அவருக்கு பாராட்டுக்கள் குவியும்.

சமீபத்தில் இவர்,” நல்ல நடிப்புத் திறமை உள்ள நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைப்பது இல்லை.அதே சமயம் பெரிய ஹீரோக்களின் படங்களில் 2 பாட்டுக்கு மட்டும் ஆடி விட்டு செல்லும் நடிகைகளுக்கு வாய்ப்புகள் வந்து குவிகிறது” என்ற உண்மையை பளிச்சென்று கூறினார்.

இந்நிலையில் அவர் திரையுலகம் பற்றிய பேட்டியில்,என் வாழ்க்கையில் தரமணி முக்கியமான படம். நடிகைக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம் கொண்ட படம் அது.

தரமணி மட்டும் அல்ல ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அருவியும் வெற்றி பெற்றது.

ரசிகர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். படம் பார்ப்பவர்கள் அந்த பெண் என்ன செய்தது? சும்மா பாடல்களுக்கு வந்து டான்ஸ் மட்டும் ஆடி விட்டு போனது என்கிறார்கள்.

அழகாக இருப்பதை தவிர்த்து நடிகைகள் நன்றாக நடிக்கவும் வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

தரமணி படத்திற்கு பிறகு பல ஸ்க்ரிப்டுகள் வந்தது. அதில் ஒரு இயக்குனர் மது அருந்தி, தம்மடிக்கும் கதாபாத்திரத்துடன் வந்தார்.ஏன் என்று கேட்டால் தரமணியில் நான் அப்படி செய்தேன் என்றார். அது என்ன ஆண்கள் மது அருந்தி, தம்மடித்தால் மட்டும் சரியா என்று கேட்பதற்காக தரமணியில் அந்த காட்சி வைக்கப்பட்டது.

தரமணி பட ரிலீஸ் தள்ளிப் போன நேரம் திரையுலகம் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்து நடிப்பை விட்டு விடலாம் என்று நினைத்தேன் என்று நடிகை ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.