8 மாத குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்த தந்தை!!

1340

தமிழ்நாட்டில் 8 மாத ஆண் குழந்தையை கழுத்து நெரித்து கொன்ற தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மதுரையில் உள்ள அம்மச்சியாபுரத்தை சேர்ந்த அஜித்குமார் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் அத்தை மகள் பாண்டிசெல்வியை காதலித்து திருமணம் செய்த நிலையில் தம்பதிக்கு கிஷோர் என்ற 8 மாத ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் அஜித்குமாருக்கு அதே பகுதியை சேர்ந்த வேறு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனையறிந்து கணவருடன் தகராறில் ஈடுபட்ட பாண்டிசெல்வி கிஷோரை தூக்கி கொண்டு தாய் வீட்டில் சென்று வசித்து வந்தார்.

இந்நிலையில், தனது இரண்டாவது திருமணத்திற்கு குழந்தை தடையாக இருக்கும் என கருதிய அஜித்குமார், தனது மனைவியிடம் தான் திருந்தி விட்டதாக கூறி நயவஞ்சகமாக அழைத்து வந்துள்ளார்.

பின்னர் குழந்தை கிஷோரை தனது நண்பரின் உதவியோடு கழுத்தை நெறித்து கொலை செய்து ஒன்றும் தெரியாது போல் நாடகமாடியுள்ளார்.

ஆனால் மருத்துவர்கள் குழந்தையின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறிய நிலையில் பொலிசார் அஜித்குமாரிடம் விசாரித்தனர்.

விசாரணையில் அவர் உண்மையை ஒப்பு கொண்ட நிலையில் அவரையும், நண்பர் மணியையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.