மகள் கண்முன்னே பெண்களிடம் சில்மிஷம்: சிங்கப்பூரில் கைதான இந்திய மருத்துவர்

1093

சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்ற இந்திய மருத்துவர், அங்கிருந்த நீச்சல் குளத்தில் நான்கு பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்திய மருத்துவர் ஜகதீப் சிங் அரோரா (46), தனது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக 11 வயது மகள் மற்றும் மனைவியுடன் சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். அங்கு பிரபல ஹோட்டல் ஒன்றில் அரை எடுத்து தங்கியிருந்த அவர், தனது மனைவி மகளுடன் இரவு நீச்சல் குளத்தில் குளித்துள்ளார்.

அப்போது 57 மாடியில் குளித்து கொண்டிருந்த லிதுவேனியாவை சேர்ந்த 25 வயது பெண், புகைப்படம் எடுத்து கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்த அரோரா தண்ணீருக்கு அடியில் அந்த பெண்ணை நெருங்கி பின் பக்கத்தில் கை வைத்துள்ளார்.

இதனை சுதாரித்துக்கொண்ட அந்த இளம்பெண் உடனடியாக நீச்சல் குளத்தை விட்டு வெளியேறி கணவரிடம் கூறியுள்ளது. இதனையடுத்து அரோரா தொடர்பாக ஹோட்டலின் செக்யூரிட்டியிடம் புகார் சென்றடைந்தது.

இதற்கிடையில் சம்பவம் நிகழ்ந்த அடுத்த நிமிடத்திலேயே நீச்சல் குளத்தில் இருந்த கொரிய நாட்டைச் சேர்ந்த பெண்ணின் வயிற்றை தொட்டுள்ளார். பின்னர் குளத்திலிருந்து வெளியேறிய அரோரா, மீண்டும் வந்து கொரிய பெண்ணின் பின் பக்கத்தை தொட்டதோடு, அவரது தோழிகளிடமும் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து 4 பெண்களும் கொடுத்த புகாரின் அடிப்படையில் நேற்று அவரை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு அவரை இரண்டு வாரங்களுக்கு சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.11 வயது மகள் மற்றும் மனைவியின் கண்முன்னே தந்தை, பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.