இருட்டு அறையில் வைத்து கணவன் செய்த கொடுமை : துடிதுடித்து இறந்த இளம் மனைவி!!

752

இந்தியாவில் மனைவியை ஒரு மாதத்துக்கும் மேலாக இருட்டறையில் அடைத்து வைத்து கணவன் கொடுமைப்படுத்திய நிலையில் மனைவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் நஹீம்கான். இவர் மனைவி ரசியா. ரசியாவை சில காலமாக நஹீம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் மார்ச் மாதத்தில் டெல்லிக்கு சென்ற நஹீம் அங்கிருந்தபடியே போனில் மூன்று முறை முத்தலாக் கூறி மனைவி ரசியாவை பிரிந்துள்ளார்.

பின்னர் கடந்த ஏப்ரலில் தான் மனம் மாறிவிட்டதாக கூறி மீண்டும் ரசியாவை தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

ஆனால் மனம் மாறாத நஹீம், ரசியாவை அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார். மேலும், ஒரு மாதத்துக்கும் மேல் இருட்டறையில் எப்போதாவது மட்டும் உணவு கொடுத்து பட்டினி போட்டு அடைத்து வைத்துள்ளார்.

இதையடுத்து ரசியாவின் குடும்பத்தார் நஹீம் வீட்டுக்கு வந்து ரசியாவை மீட்டனர்.

உடல் நலம் குன்றிபோன ரசியா கணவர் கொடுமையால் நோய்வாய்ப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் ரசியா தற்போது உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து நஹீம் செய்த கொடுமைகள் குறித்து ரசியா குடும்பத்தார் பொலிசில் புகார் கொடுத்தனர்.

அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் டெல்லியில் உள்ள நஹீமை கைது செய்ய தனிப்படையை விரைவில் அனுப்புவோம் என தெரிவித்துள்ளனர்.