4 மாதங்களாக மாயமான இளம்பெண் தொடர்பில் பொலிசாருக்கு கிடைத்த முக்கிய தகவல்!!

760

இந்தியாவின் கேரள மாநிலத்தில் கடந்த 4 மாதங்களாக மாயமான இளம்பெண் தொடர்பில் பொலிசாருக்கு முக்கிய தகவல் கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள முண்டக்கயம் பகுதியில் இருந்து ஜெஸ்னா மரியா என்ற 19 வயது மாணவி கடந்த மார்ச் 22 ஆம் திகதியில் இருந்து மாயமாகியுள்ளார்.

சிறப்பு குழு அமைத்து பொலிசார் தீவிரமாக தேடியும் குறித்த இளம்பெண் உயிருடன் உள்ளாரா அல்லது கொல்லப்பட்டாரா என்ற தகவல் இதுவரை இல்லை.

சம்பவத்தன்று பேருந்து ஒன்றில் ஏறிச்செல்லும் மாணவி குறித்த கண்காணிப்பு கமெரா காட்சிகளின் அடிப்படையில் பொலிசார் விசாரணை மேற்கொண்டனர்.

மட்டுமின்றி முண்டக்கயம் பகுதியில் உள்ள கடை ஒன்றில் கடந்து செல்லும் கமெரா காட்சிகளையும் பொலிசார் விசாரணைக்கு உட்படுத்தினர்.

இருப்பினும் மாயமான மாணவி தொடர்பில் எந்த தகவலும் இன்றி பொலிசார் விழிபிதுங்கியுள்ள நிலையில், மாயமான மாணவியை கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள விமான நிலையத்தில் கண்டதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

மே மாதம் 5 ஆம் திகதி கிடைத்த இந்த தகவலின் அடிப்படையில் பெங்களூரு சென்ற பொலிசாருக்கு அந்த தகவலில் உண்மை இல்லை என தெரியவந்தது.

தற்போது மீண்டும் கர்நாடகாவில் உள்ள மடிவாளா பகுதியில் ஜெஸ்னா என்ற அந்த மாணவியை கண்டுள்ளதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

ஜெஸ்னா மாயமாவதற்கு முன்னர் தமது ஆண் நண்பர் ஒருவருக்கு தொலைபேசியில் பலமுறை அழைத்ததாகவும், அவருக்கு அனுப்பிய கடைசி குறுஞ்செய்தியில் தாம் தற்கொலை செய்துகொள்ள இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த ஆண் நண்பரை பொலிசார் விசாரணைக்கு உட்படுத்தியும், இந்த வழக்கு தொடர்பில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என விசாரணை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

மட்டுமின்றி விசாரணைக்கு உட்படுத்திய கமெரா காட்சிகளில் அந்த ஆண் நண்பர் இல்லை எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.