கந்து வட்டிக்காரர் துண்டு துண்டாக வெட்டி கொலை : கள்ளக்காதலி கொடுத்துள்ள பரபரப்பு வாக்குமூலம்!!

388

சென்னை…..

மணலியில் உள்ள செல்வ விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சக்கரபாணி (65). திமுக பிரமுகரான இவர் வட்டி தொழிலும் செய்து வந்தார். வட்டி பணத்தை வாங்கி வருவதாக கூறி கடந்த 10 ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் வெளியில் சென்ற சக்கரபாணி வீடு திரும்பவில்லை. இதனால் சக்கரப்பணியின் மகன் நாகேந்திரன் மணலி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து செல்போன் சிக்னல், சிசிடிவி கேமரா அடிப்படையில் தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை, ராயபுரம் கிரேஸ் கார்டன் மூன்றாவது தெருவில் வசிப்பவர்கள், அங்குள்ள ஒரு வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக மணலி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து, தமீம்பானு (40) என்பவரது வீட்டில் சோதனையிட்டபோது பாத்ரூமில் ரத்த கரையுடன் சாக்குமூட்டை இருப்பதை போலீசார் கண்டறிந்தனர். மேலும், அந்த சாக்கு மூட்டையில் காணமால் போன சக்கரபாணியின் உடல் பாகங்கள் இருப்பதும், கள்ளக்காதல் விவகாரத்தில் தமீம்பானுவும், சகோதரனும் சேர்ந்து சக்கரபாணியை 10 துண்டுகளாக வெட்டி கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. மேலும், இவர்களுக்கு உடந்தையாக இருந்த ஆட்டோ டிரைவர் டில்லி பாபு (29) தலைமறைவாக இருந்து வந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்டார்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மணலியில் உள்ள சக்கரபாணி வீட்டில் நானும் என் குடும்பமும் வாடகைக்கு குடியிருந்தோம். எனது கணவர் அஸ்லாம் உஜைனி டி. நகரில் வேலை பார்த்து வருகிறார். அவர் வாரத்துக்கு ஒருமுறைதான் வீட்டுக்கு வருவார்… நானும் என் இரு மகள்களும்தான் வீட்டில் இருப்போம்… எனக்கு 14 மற்றும் 12 வயதில் 2 மகள்கள் உள்ளனர்… ஹவுஸ் ஓனர் சக்கரபாணி எனக்கு வட்டிக்கு பணம் கொடுத்து உதவினார்.

மாதத்தில் பாதி நாட்கள் தனிமையில் வசித்து வந்ததால் எனக்கும், சக்கரபாணிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது… நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது… எனது வீட்டுக்குள்ளேயே இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தோம்… இந்த சூழலில் சக்கரபாணிக்கு தெரியாமல் ராயபுரம் கிரேஸ் கார்டன் பகுதியில் வசித்து வரும் எனது தம்பி வாசிம் பாஷா வீட்டில் குடியேறினோம்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கான நாங்கள் இங்கு வசித்து வருவதை எப்படியோ சக்கரபாணிக்கு தெரிந்துவிட்டது… கணவர் இல்லாத நேரத்தில் சக்கரபாணி வட்டி பணம் கேட்டு வருவதைப்போல வீட்டுக்கு வருவார்… எனக்கு விருப்பமே இல்லையென்றாலும் என்னை கட்டாயப்படுத்தி உறவு வைத்துவிட்டு செல்வார்…

இந்த சூழலில் கீழ் வீட்டில் வசிக்கும் ஆட்டோ டிரைவர் டில்லி பாபு (29) என்பவருடன் எனக்கு கள்ளகாதல் ஏற்பட்டது… நானும் டில்லி பாபுவும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தோம்… கடந்த 10 ஆம் தேதி இரவு சக்கரபாணி என்னை பார்க்க வந்தார்.

அப்போது வீட்டில் மகள்கள் இருந்தார்கள் என்பதால் சக்கரபாணியை போய் விடுங்கள் என கூறினேன்… அவர் கேட்கவே இல்லை… வீட்டுக்குள் நுழைந்து என்னை கட்டிப்பிடித்து உறவு வைத்துக்கொள்ள பிடிவாதமாக இருந்தார்… அங்கங்களை பிடித்து தொந்தரவு செய்தார்.

சத்தம் கேட்டு கீழ் வீட்டில் இருக்கும் என் தம்பி வாசிம் பாஷா மேல் ஓடி வந்தான்… அவன் ஆத்திரமடைந்து இனிமேலும் உன்னை விடக்கூடாது எனக்கூறி சக்கரபாணியை கொல்ல முடிவு செய்தான்… பின்னர் நானும் தம்பியும் சேர்ந்து சக்கரபாணியை கீழ் தள்ளிவிட்டு அரிவாள்மனை, கத்தியை வைத்து உயிர் போகும்வரை வெட்டி கொலை செய்தோம்…

பின்னர் கழுத்தை துண்டித்து பிளாஸ்டிக் பையில் கட்டினோம்… குடலை தனியாக உருவி ஒரு பையில் கட்டினோம்… பின்னர் கீழ் வீட்டில் இருக்கும் டில்லி பாபுவின் ஆட்டோவில் டில்லியும், பாஷாவும் சென்று குடலை காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியிலும், தலையை அடையாறு மலர் ஆஸ்பத்திரி அருகேவும் கல்லைகட்டி ஆற்றில் வீசிவிட்டு வந்தனர்.

மறுநாள் மார்க்கெட்டில் கத்தி வாங்கிவந்து சக்கரபாணியின் உடலை 10 துண்டுகளாக வெட்டி சாக்குமூட்டையில் கட்டி பாத்ரூமில் வைத்து பூட்டிவிட்டோம்… வெளியில் போலீஸ் நடமாட்டம் இருந்ததால் அந்த மூட்டையை வெளியில் எடுத்துவர முடியவில்லை.. அதற்குள் போலீஸ் எங்களை கைது செய்துவிட்டனர்… என தமீம்பானு தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

சக்கரபாணியின் உடல் பாகங்களை மீட்டெடுத்த போலீசார் தமீம்பானு, அவரது தம்பி வாசிம் பாஷா, ஆட்டோ டிரைவர் டில்லிபாபு ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.