12 வயது பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய சிறுவன் : தமிழகத்தை உலுக்கிய பரபரப்பு சம்பவம்!!

345

விருதுநகர்….

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பிரபலமான பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. பள்ளி ஒன்றில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமியின் தாய் வெளியூரில் தங்கி வேலை பார்த்து வரும் நிலையில், தாத்தா, பாட்டி அரவணைப்பில் தங்கி பள்ளிக்கு சென்று வருகிறார்.

சிறுமியிடம் நட்பாக பழகிய அதே பகுதியை சேர்ந்த 18 வயது சிறுவன் ஒருவர், அவரை காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். அதோடு, திருமணம் செய்துக்கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியுடன் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், அவரது தாத்தா – பாட்டி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர். மேலும், சிறுமி மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டி இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தாத்தா – பாட்டி சிறுமியிடம் நடந்தது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது, கதறி அழுதவாரே கர்ப்பத்திற்கு காரணம் அதே பகுதியை சேர்ந்த சிறுவன் என்பதை எடுத்துக் கூறியுள்ளார்.

பின்னர், சிறுமி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த விருதுநகர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் அந்த சிறுவனை கைது செய்து மேலூரில் உள்ள அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர். பொதுத்தேர்வு எழுதும் மாணவியை கர்ப்பமாக்கிய சிறுவன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.