தாயின் சடலத்தை பிளாஸ்டிக் ட்ரம்மில் மூடி வைத்த மகன் : பின்னர் தெரிய வந்த உண்மை!!

291

சென்னை….

தமிழக தலைநகர் சென்னையில் நபர் ஒருவர் இறந்த தாயின் உடலை பிளாஸ்டிக் ட்ரம்மில் போட்டு வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை நீலாங்கரை சரஸ்வதி நகரைச் சேர்ந்தவர் சுரேஷ்(53). குடிப்பழக்கம் உள்ள இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் அவரது மனைவி, குழந்தைகளுடன் பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் தனது 86 வயது தாய் செண்பகத்துடன் சுரேஷ் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் செண்பகத்தை கடந்த சில நாட்களாக காணவில்லை என அக்கம்பக்கத்தினர் சுரேஷிடம் கேட்டபோது, அவர் கூறிய விடயம் அதிர்ச்சி அளித்துள்ளது.

தனது தாய் உடல்நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டதாகவும், துர்நாற்றம் வீசியதால் அவரது சடலத்தை வீட்டில் இருந்த பிளாஸ்டிக் ட்ரம்மில் போட்டு மூடி, சிமெண்ட் வைத்து பூசி மூடி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். அவர் நான்கு நாட்கள் சடலத்துடன் வீட்டில் இருந்திருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சுரேஷின் வீட்டிற்கு விரைந்தனர். செண்பகத்தின் உடலை மீட்ட பொலிஸார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்துள்ள பொலிஸார் சுரேஷிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.