மருமகள், பேரனை தீ வைத்து கொளுத்திய மாமனார் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

382

தேனி…..

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன்பட்டி கிராமத்தில் மந்தையம்மன் கோவில்தெருவில் வசித்து வருபவர் கூலித் தொழிலாளியான அருண் பாண்டியன்(25). இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அதே பகுதியில் வசிக்கும் சுகப்பிரியா (21) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

இவர்களுக்கு யாகித் என்ற ஒரு வயது ஆண் குழந்தையும் பிறந்து மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்தனர். இந்த சூழ்நிலையில் மகனின் காதல் திருமணத்தை ஏற்க மறுத்த அருண் பாண்டியனின் தந்தை பெரியகருப்பன் (53) அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்

அமீர் செய்த காரியத்தால் கதறி அழும் பாவனி: சண்டைக்கு வந்த பிரியங்கா..!
இந்த நிலையில், நேற்றிரவு மதுபோதையில் வந்த பெரியகருப்பன் தனது மனைவி மற்றும் மருமகள் சுகப்பிரியாவுடன் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது, வாக்குவாதம் முற்றி மருமகள் சுகப்பிரியா மற்றும் பேரக்குழந்தையான யாகித் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றிய மாமனார் பெரியகருப்பன் தொடர்ந்து அவர்கள் மீது தீ வைத்துள்ளார்.

இதில் படுகாயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்று போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர்.

மேலும், மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்து மேல்சிகிச்சைக்காக படுகாயமடைந்த சுகப்பிரியாவை தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளார்.

இது குறித்து ராயப்பன்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, பெரியகருப்பனிடம் காதல் திருமண எதிர்ப்பா அல்லது வரதட்சனை கொடுமை காரணமா என்று இரு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.