பெண் குழந்தை பெற்றதால் முத்தலாக்…..கணவனின் வெறி செயலால் கைக்குழந்தையுடன் கண்ணீர் விடும் இளம் பெண்

877

உத்தரபிரதேச மாநிலத்தில் பெண் குழந்தையை பிரசவித்த காரணத்திற்காக, முத்தலாக் சொல்லி மனைவியை, கணவன் விவகாரத்து செய்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம், ஷாம்லி மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக பெண் குழந்தையைப் பிரசவித்துள்ளார்.

இதனால் கடும் அதிருப்தியைடைந்த அவரது கணவரும் மற்றும் அவரது சகோதரிகளும் பெண் குழந்தை பெற்றெடுத்ததற்காக அப்பெண்ணை அடித்துக் கொடுமைப்படுத்தியுள்ளனர்.

மேலும் பெண்குழந்தையை பெற்றெடுத்ததால் அதற்கு தனியே, வரதட்சணை வேண்டும் என்று மிரட்டிய கணவர் குடும்பத்தார், அப்பெண்ணின் பெற்றோரிடமிருந்து ஒரு பைக்கும் பணமும் வாங்கி வர வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். அதற்கு வாய்ப்பில்லை என்று தெரிந்தபோது அந்த பெண்ணின் கணவர் மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்துள்ளார்.

திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகளே ஆன நிலையில், பெண்குழந்தை பிரசவித்த காரணத்திற்காக கணவன், தலாக் செய்த சம்பவம் பெண் வீட்டாரை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதனையடுத்து பெண் வீட்டார் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து உதவி காவல் கண்காணிப்பாளர் ஷோக் குமார் கூறுகையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.