காதலை ஏற்க மறுத்த சிறுவன்! பிளேடால் கிழித்து ரத்த வெள்ளத்தில் துடிக்க வைத்த பெண்

1501

இந்தியாவில் காதலை ஏற்க மறுத்த சிறுவனின் முகத்தை பிளேடால் கிழித்த பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் சிறுவன் ஒருவனை பெண் தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று காதலை தெரிவித்துள்ளார்.

ஆனால் சிறுவன் அவரின் காதலை ஏற்க மறுத்ததால், ஆத்திரமடைந்த அப்பெண், சிறுவனின் முகத்தை மிக ஆழமாக பிளேடால் கிழித்துள்ளார்.இதனால் சிறுவன் ரத்தவெள்ளத்தில் அங்கையே கிடந்துள்ளான்.

இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக குறித்த பெண்ணை கைது செய்த பொலிசார் அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, காதலை ஏற்க மறுத்த்தால், பிளேடால் கிழித்ததாகவும் கூறியுள்ளார்.

பொலிசார் விசாரித்து கொண்டிருந்த போதே அந்த பெண் கையை கிழித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதை தடுத்து நிறுத்திய பொலிசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.