தனது காதலியுடன் மஹத் செய்யும் லீலை… யாஷிகா காதலனின் மனக்குமுறல் என்ன?

1286

நடிகை யாஷிகா ஆனந்த் தற்போது வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகியுள்ளார்.தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ள யாஷிகா கடந்த வாரத்தில் எலிமினேஷன் லிஸ்டில் இருந்தார். அதன்பின்பு மக்கள் கொடுத்த தீர்ப்பினால் மீண்டும் உள்ளே இருக்கிறார்.

இதில் யாஷிகா, ஐஸ்வர்யாவிடம் மஹத் அடிக்கும் லூட்டி நெட்டிசன்களை பயங்கர கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சீசனில் இருந்தவர்கள் இதற்கு பரவாயில்லை என்று கலாய்த்து வருகின்றனர்.இந்நிலையில் யாஷிகாவின் தங்கை, காதலர் மற்றும் நண்பர்கள் அளித்த பேட்டி தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது.

இதில் யாஷிகாவின் தங்கை வெளியே இருந்து கண்கலங்கியதாகவும், வீட்டில் இருக்கும் போது வெங்காயம் வெட்டுவது என்பதே தெரியாது என்று தெரிவித்துள்ளார்.யாஷிகாவின் காதலர் பேசுகையில், மிகவும் தைரியமான பெண் என்றும், அவரது வீட்டில் டிவி இல்லை ஆதலால் விளையாட்டு எப்படியிருக்கும் என்பதை சீசன் ஒன்றில் சில காட்சிகளை அவதானித்து செல் என்று கூறியுள்ளார். அதற்கு யாஷிகா இது விளையாட்டு தானே ஒன்னும் பிரச்சினை இல்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் மஹத் குறித்து கூறுகையில், மஹத் காதலியிடம் உள்ளே நடப்பதை எதையும் கண்டுகொள்ள வேண்டாம், வெளியே வந்ததும் எப்பொழுதும் போல் தான் இருப்பேன் என்று கூறியுள்ளார். மஹத்தின் இந்த வார்த்தையை நம்பி தான் யாஷிகாவின் காதலரான நான் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.மஹத்தும் தனது காதலியைத் தான் முதலில் மிஸ் பண்ணுகிறேன் என்று அனைவரது முன்பும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.