அண்ணியுடன் கள்ளக்காதல்… கண்ணை மறைத்த உல்லாசம் : இறுதியில் எடுத்த விபரீத முடிவு!!

1670

செங்கல்பட்டு..

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ளது சிலவாட்டம் கிராமம். இந்த பகுதியில் கொஞ்சம் தள்ளி அடர்ந்த மரங்கள் பல உள்ளன. அங்குள்ள வேப்ப மரத்தில் ஆண், பெண் இருவர் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்ட உளூர்வாசிகள் பதறி அடித்துக்கொண்டு சென்று ஊர் மக்களுக்கு தகவல் கூறினர். பின்னர் மதுராந்தகம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சிலாவட்டம் கிராமத்திற்கு சென்று மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், இருந்த ஆண் பெண் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அதன்பின்னர் நடத்திய விசாரணையில், ஆண் பெயர் அருள்ஜோதி வயது 23 என்பதும் பெண்மணி முத்துலட்சுமி வயது 35 என்பதும் இருவரும் மதுரையைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது.

முத்துலட்சுமியின் கணவருக்கு அருள்ஜோதி பெரிப்பா மகன் ஆவார். அருள் ஜோதி சிறிய பையன் என்பதால் அருகில் இருக்கும் அண்ணன் வீட்டிற்கு சென்று வருவது வழக்கம். அவ்வாறு அடிக்கடி சென்றதால் அருள்ஜோதிக்கும் முத்துலட்சுமிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டு அடிக்கடி வீட்டுக்குளேயே உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இது குடும்பத்தாருக்கு தெரிய வர இருவரையும் கண்டித்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையிலிருந்து, காணாமல் போன இருவரும் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.