நிமிஷா சஜயன்..

தொண்டி முதலும் திருசாட்சியும் என்னும் மலையாள படத்தின் மூலம் திரையுலகின்றகு அறிமுகமானவர் நிமிஷா சஜயன். இதைத் தொடர்ந்து, பல்வேறு திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இதன்மூலம், பல்வேறு விருதுகளையும் அவர் வென்றுள்ளார்.

குடும்பப் பெண்கள் அனுபவிக்கும் இன்னல்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ‘அச்சம் என்பது இல்லையே’ என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார். சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர்,

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தும். எனவே, இவரை ஆயிரக்கணக்கானோர் ஃபாலோ செய்து வருகின்றனர். இந்த நிலையில், நிர்வாணமாக இருக்கும் ஒரு பெண்ணின் புகைப்படத்தை பகிர்ந்து,

அதில், ’சில இரவுகளில் என் விரல்கள் என் தலைமுடி, என் தொடைகள் வழியாக பயணம் செய்கின்றன, அப்போது நான் கண்ணை மூடுகின்றேன், ஆனாலும் உன்னை பார்க்கிறேன்’ என்று கவிதை வடிவில் பதிவு செய்துள்ளார். அவரது இந்தப் பதிவை பார்த்து அதிர்ந்து போன ரசிகர்கள் இதை நிமிஷா சஜயன்தான் போஸ்ட் செய்தாரா..? என்ற குழப்பத்தில் ஆழ்ந்து போயுள்ளனர்.

View this post on Instagram