கேரளாவில் பெண் பொலிஸ் ஒருவர், பொலிஸ்காரருடன் நெருக்கமாக இருக்கும் காட்சி வாட்ஸ்-அப்பில் பரவியதால் பொலிஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த காட்சியை அந்த பெண் பொலிஸ் தான் வாட்ஸ் அப் குரூப்பில் உள்ள தனக்கு நெருக்கமானவர்களுக்கு அனுப்பி உள்ளார்.தானும் அந்த பொலிஸ்காரரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் அதில் அவர் கூறியிருந்தார். ஆனால், அந்த காட்சியை யாரோ மற்ற வாட்ஸ் அப் குரூப்களிலும் பரவவிட்டதால் தற்போது அது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
இதைதொடர்ந்து இந்த விவகாரம் கேரள உயர் பொலிஸ் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவர்கள் இதுதொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டனர்.
விசாரணையில், அந்த பெண் பொலிஸ் மாலூர் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றுவது தெரிய வந்தது. இதைதொடர்ந்து அவரை கேரளாவில் உள்ள வேறு பொலிஸ் நிலையத்திற்கு மாற்றி உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதற்கிடையில் இந்த காட்சியை பரப்பியவர்கள் பற்றியும் விசாரணை நடந்து வருகிறது. அந்த வாட்ஸ் அப் குரூப்பில் உள்ளவர்களின் விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது.
பொலிசாரின் வாட்ஸ் அப் குரூப்பில் உள்ள ஒரு பொலிஸ்காரர் தான் இந்த காட்சியை பரப்பியவர் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.