இப்படித்தான் எங்களை சீரழித்தார்கள் : சிறுமிகளின் கண்ணீர் வாக்குமூலம்!!

694

பீகார் மாநிலத்தில் உள்ள விடுதி ஒன்றில் சுமார் 44 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் கண்ணீர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

அரசின் நிதியுதவி பெற்று செயல்பட்டு வரும் இந்த விடுதியில் தங்கியிருந்த 44 சிறுமிகளில் 29 பேர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பதாக தெரியவந்தது.

விடுதியில் இருப்பவர்களால் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமிகளில் சிலருக்கு கரு உருவாகியுள்ளது,

இதில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் அளித்துள்ள வாக்குமூலத்தில், எங்களை பாலியல் வன்கொடுமை செய்வதற்கு முன்பு உடலில் தீக்காயங்களை ஏற்படுத்துவார்கள். அதன்பிறகு, போதை மருந்துகளை தினமும் கொடுப்பார்கள், போதை மருந்து கொடுத்த பின்னர் பாலியல் வன்கொடுமை செய்வார்கள் , எங்களை ஒருநாள் கூட நிம்மதியாக இருக்கவிட்டது கிடையாது,

இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் நாங்கள் பலமுறை தற்கொலைக்கு முயன்றுள்ளோம் என கூறியுள்ளனர்.

இப்போது பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு மன நல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை இந்த விவகாரத்தில் அந்த விடுதியை சேர்ந்த 10 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.