இறந்த தாயின் கைகளில் அழுதுகொண்டிருந்த குழந்தை : 15 வருடங்களுக்கு பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

749

அதிர்ச்சி சம்பவம்

பிரித்தானியாவில் தாயின் தற்கொலை சம்பவத்தின் போது உயிர் பிழைத்த 3 வயது குழந்தை 15 வருடங்களுக்கு பின்னர் அதேபோல தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்த Maxine Carr என்ற பெண் கடந்த 2003-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1 தேதியன்று நெடுஞ்சாலை பகுதியில் உள்ள 100 அடி உயரம் கொண்ட பாலத்திலிருந்து தன்னுடைய குழந்தையுடன் குதித்து தற்கொலை செய்துகொண்டு இறந்து போனார்.

அந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக அவர் கையில் வைத்திருந்த 3 வயது குழந்தை மட்டும் கை, விலா, தாடை மற்றும் மண்டை ஓடு உடைந்த நிலையில் உயிர் பிழைத்தது. பின்னர் மீட்கப்பட்ட அந்த குழந்தை சிகிச்சைக்கு பின்னர் பாட்டி மற்றும் தாத்தாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

Maxine இறந்ததற்கான காரணம் எதுவும் சரியாக தெரியாத நிலையில், அவருடைய முன்னாள் காதலன் குழந்தையை கடத்தி ஸ்பெயினிற்கு எடுத்து செல்ல முற்பட்டதாலே அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் 15 வருடங்களுக்கு பின்னர் நன்கு வளர்ந்திருந்த Yazmina Howard (18), அவருடைய தாய் தற்கொலை செய்துகொண்டு இறந்த அதே இடத்தில் மீண்டும் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்த சம்பவமானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.