ஏற்கனவே 150 குழந்தைகளை பெற்ற தாராள பிரபு; லாக்டவுனிலும் மேலும் 6 குழந்தைகள்.. வியப்பான தகவல்!!

388

அமெரிக்கா………

அமெரிக்காவை சேர்ந்த ஜோ டோனர் என்பவர், விந்து நன்கொடையாளர். இவர் ஏற்கனவே 150 குழந்தைகளை பெற்ற நிலையில், தற்போது லாக்டவுனில் 6 குழந்தைகளை பெற்றிருப்பதால் பிரபலமாகியுள்ளார்.

இதையடுத்து, அவர் தெரிவிக்கையில், “எனக்கு உலகளவில் சுமார் 150 குழந்தைகள் உள்ளனர், ஆனால் தற்போது என் குழந்தைகளை சுமந்துகொண்டு ஐந்து பெண்கள் கர்ப்பமாக உள்ளனர்.

ஏற்கனவே ஒருவர் பிரசவித்திருக்கிறார். கொரோனா வைரஸ் என்னை தொய்வடைய வைத்துவிடவில்லை, முன்பை விட பரபரப்பாக உணர்கிறேன்.

குழந்தைகள் பிறக்கும்போது அவர்களின் புகைப்படங்களைப் பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.

அவர்களில் நிறைய பேர் என்னைப் போலவே இருக்கிறார்கள்” என கூறியுள்ளார்.

தற்போது, இவரால் ஐந்து பெண்கள் தற்போது இவரது குழந்தைகளை பெற்றிருக்கிறார்கள்.

ஒருவர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் குழந்தை பிரசவித்தார். ஆனால் எல்லா பிரசவங்களும் குறித்த நேரத்தில் நடந்திருந்தால், 2020 ஆம் ஆண்டில் ஜோ 10 குழந்தைகளைப் பெற்றெடுத்திருப்பார் என்கின்றனர்.