கணவனுக்கு துரோகம் செய்து காதலனுடன் வாழ்ந்து வந்தது ஏன்? தீக்குளித்து இறந்த மனைவியின் மரணவாக்குமூலம்!!

1270

கள்ளக்காதலன் என்னை மயக்க மருந்து கொடுத்து கற்பழித்ததாககவும், நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ எடுத்து மிரட்டியதாகவும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட பெண் மரண வாக்குமூலம் அளித்துள்ளார்.

கோயமுத்தூர் பீளமேடு பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருபவர் சேகர். இவரது மனைவி பார்வதி. இவர்களிடம் குமாரபாளையத்தை சேர்ந்த ஈஸ்வரன் கார் டிரைவராக வேலைப் பார்த்து வந்தார்.

அப்போது கார் டிரைவர் ஈஸ்வரனுக்கும், பார்வதிக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த சேகர் மனைவியிடம் தகராறு செய்து பிரிந்துவிட்டார்.

இதையடுத்து பார்வதி, கோயமுத்தூரில் இருக்கும் தன்னுடைய சொத்துக்களை எல்லாம் விற்றுவிட்டு, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சடையம்பாளையம் காந்தி நகரில் வாடகை வீட்டில் குடியேறினார். அங்கு ஈஸ்வரன் மற்றும் பார்வதி ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.

அப்போது பார்வதியிடம் இருந்து 1 கோடியே 30 லட்சம் ரூபாய் பணத்தை ஈஸ்வரன் வாங்கியுள்ளார். ஈஸ்வரனுக்கு ஏற்கனவே திருமணமாகி மல்லிகா என்ற மனைவி உள்ளார்.

இந்நிலையில் பார்வதி மீது இருந்த ஆசை ஈஸ்வரனுக்கு குறைந்ததால், அவர் உடனடியாக தன்னுடைய மனைவியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

ஈஸ்வரன் விட்டுச் சென்றதால், ஆத்திரமடைந்த பார்வதி, ஈஸ்வரனின் வீட்டுக்குச் சென்று, தன்னிடம் வாங்கிய பணத்தை திருப்பித் தருமாறு கேட்டு சண்டை போட்டுள்ளார்.

ஆனால் பணத்தைத் திருப்பித் தர மறுத்த ஈஸ்வரன், தனது மனைவி மற்றும் மைத்துனருடன் சேர்ந்து பார்வதியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்

இதனால் பார்வதி உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் பொலிசார் எந்த வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் விரக்தியடைந்த பார்வதி குமாரபாளையம் காவல்நிலையத்தின் முன்பு தீக்குளித்தார்.

இதைக் கண்ட அங்கிருந்தவர்கள் மற்றும் பொலிசார் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போதும், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பார்வதியிடம் பொலிசார் மரண வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

அதில், ஈஸ்வரன், எங்கள் வீட்டு டிரைவர் பணிக்கு வந்த போது அறிமுகம் ஆனார். முதலில் சகஜமாக பழகிய அவர், ஒரு கட்டத்தில் மயக்க மருந்தை கொடுத்து என்னை கற்பழித்து விட்டார். பின்னர் அவர் என்னுடன் நெருக்கமாக இருப்பது போன்று வீடியோ எடுத்துக்கொண்டு என்னை மிரட்டி பணம் பறித்தார்.

இதனால் எனது கணவர் பிரிந்து சென்ற நிலையில், எனது சொத்துகளை விற்க வைத்து அதில் 1 கோடியே 30 லட்சத்தை ஈஸ்வரன் வாங்கி கொண்டார். அதை கேட்ட போது அவர் தரமறுத்து விட்டதுடன், என்னுடன் பேச மறுத்து விட்டார்.

இதனால் இழந்த எனது பணத்தை திரும்ப பெறுவதற்காக குமாரபாளையம் காவல்நிலையத்தில் புகார் செய்தேன். அவர்கள் வழக்கு மட்டும் பதிவு செய்து விட்டு விசாரணை நடத்தவில்லை.

அதுமட்டுமின்றி ஈஸ்வரனின் குடும்பத்தினர் புகார் கொடுத்ததால் என்னை மிரட்டி வந்தனர். வேறு வழியின்றி தற்கொலை செய்ய முடிவு எடுத்தேன், இந்த நிலைக்கு காரணமானவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.