கணவனை கரம்பிடிக்க புதுமணப்பெண் செய்த துணிச்சலான செயல் : திக் திக் நிமிடங்கள்!!

564

தமிழ்நாட்டில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் திருமணத்துக்காக புதுமணப்பெண் உயிரை பணயம் வைத்து ஆற்றை கடந்துள்ளார்.

சத்யமங்கலம் அருகில் உள்ள மாயாற்றில் வெள்ளம் கரைபுரண்டு பாய்கிறது. இந்த ஊரை சேர்ந்த ராசாத்தி என்ற பெண்ணுக்கும், கோவை மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சித்குமாருக்கும் வரும் திங்கட்கிழமை திருமணம் நடைபெறவுள்ளது.

மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் ராசாத்தியையும் அவர் குடும்பத்தாரையும், ஊர் மக்கள் பரிசலில் ஏற்றி ஆற்றின் மறுகரையில் சேர்த்தனர்.

பின்னர் ராசாத்தி கூறுகையில், எனக்கு திங்கட்கிழமை திருமணம், ஆனால் அதற்கு கூட வெளியில் வராதமுடியாத நிலையில் ஊர்மக்களும், வனத்துறை அதிகாரிகளும் எங்களிடம் பேசி அனுப்பிவைத்தனர்.

எங்கள் பகுதியில் பாலம் கட்டி தரக்கோரியும் இன்னும் செய்யவில்லை என கூறியுள்ளார்.